இளம்பெண்ணை கற்பழித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட என்ஜினீயர் கைது…!!

Read Time:2 Minute, 57 Second

201605281134047153_engineer-arrested-young-woman-molested-photos-released_SECVPFகேரள மாநிலம் பத்தனம் திட்டா பெரிஞ்சகாடு பகுதியை சேர்ந்தவர் ஆரோமல் (வயது 24).

இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் திருவனந்தபுரத்திற்கு வேலை காரணமாக சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ஆரோமல் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். மேலும் அந்த காட்சியை தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார்.

நாட்கள் பல ஓடியும் தன்னை ஆரோமல் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தியதால் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த தொடங்கினார். உடனே ஆரோமல் தனது சுயரூபத்தை காட்டினார். அந்த பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடித்து வைத்திருந்ததை அவரிடம் காட்டி மிரட்ட தொடங்கினார்.

தனது ஆசைக்கு தொடர்ந்து இணங்காவிட்டால் அந்த காட்சியை இணையதளத்தில் பரவவிட்டுவிடுவதாக கூறினார். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி தனது வீட்டில் கூறி அழுதார். அந்த பெண்ணின் தந்தை இதுபற்றி அந்த வாலிபரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அதற்கு அசராத ஆரோமல் உங்கள் மகள் ஆபாச படத்தை நான் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறினார்.

இதில் பணம் தருவதில் அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டதால் அந்த இளம் பெண்ணின் ஆபாச படத்தை ஆரோமல் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இதுபற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆரோமலை கைது செய்தனர். மேலும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த நண்பரும் கார் டிரைவருமான மலப்புரத்தை சேர்ந்த செய்யது (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரும் இதுபோல வேறு பெண்களை ஏமாற்றி உள்ளனரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலையில் மனைவி, மாலையில் கணவர்: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!
Next post மனைவி உடலை விமான நிலையத்திலே விட்டு விட்டு நாடு திரும்பிய பாசக்கார கணவர்..!!