விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் பலி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் குறைபாடு என புகார்…!!

Read Time:1 Minute, 7 Second

201605282351507280_virudhunagar-government-hospital-woman-died_SECVPF (1)விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்கன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது25).

நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 25–ந்தேதி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பொன்னம்மாள் நேற்று திடீரென இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சிகிச்சையில் குறைபாடு காரணமாக பொன்னம்மாள் இறந்ததாக புகார் கூறினர்.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த கரு: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!!
Next post காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி கைது…!!