மகளின் செயலால் தந்தை தற்கொலை..!!
Read Time:1 Minute, 2 Second
காலி – வெலிகம பிரதேசத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் கழுத்தில் சுருக்கிட்டு தந்தை தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்தவர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (28) காலை தனது மகள் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தந்தை , வீட்டிலேயே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் வீட்டை விட்டு சென்ற சிறுமி 15 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating