கற்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி – மேலும் இருவர் படுகாயம்..!!

Read Time:1 Minute, 56 Second

timthumb (2)காலி அபராதுவ – தித்தகல்ல பிரதேசத்தின் கற்சுரங்கம் [quarry] ஒன்றில் இன்று இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தர்ப்பத்தின் பொது அருகில் இருந்த மேலும் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.

இவர்கள் பாரவூர்திக்கு கருங்கல் ஏற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுமார் 100 அடி உயரமான கல் குன்றின் ஒரு பகுதி உடைந்து குறித்த பாரவூர்தியின் மீது வீழ்ந்துள்ளதை தொடர்ந்து இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் தித்தகல்ல – தொலகும்புரவத்த பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபராவார்

இதேவேளை, இரத்தினபுரி அப்புகஸ்த்தென்ன வேவல்கெட்டிய தொழிற்சாலை பிரிவில் மண்ரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து 41 குடும்பங்ளை சேர்ந்த 210 பேர் அந்த பகுதியில் உள்ள சிறுவர் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டாரவின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!
Next post திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..!!