உங்கள் நாட்டையே தாக்கும் வல்லமை எங்களுக்கு உள்ளது: பாகிஸ்தான் விஞ்ஞானிக்கு இந்தியா பதிலடி..!!
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது என ஆணவத்துடன் கூறியது, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள் அதிகாரிகள் மூலம் இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து முன்னாள் ராணுவ தளபதி என்.சி. விஜ் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் முதிர்ச்சி இல்லாத, வழக்கத்தில் இல்லாத ஒரு கருத்து. அணு ஏவுகணைகள், போர் ஆயுதங்கள் அல்ல. அவை தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்குகிற அளவுக்கு இந்தியாவிடமும் வல்லமை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசுவது இல்லை” என கூறினார்.
பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னாள் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னாள் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி உள்ளனர்.
Average Rating