தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்..!!

Read Time:3 Minute, 3 Second

downloadதந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்; தப்பிச் சென்ற யுவதி பொலிஸில் முறைப்பாடு: சந்தேகத்தில் நால்வர் கைது-

நிக­வெ­ரட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்த 28 வய­தான மகளை 12 வரு­டங்­க­ளாக பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் தந்தை உட்­பட நான்கு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து இன்று 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இந்த யுவதி கரு­வுற்­றி­ருந்த நிலையில் அக்­க­ருவை கலைப்­ப­தற்கு முன்­வந்த அவ­ரது உற­வி­ன­ரான பெண்­ணொ­ரு­வ­ரையும் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­த­னை­ய­டுத்து ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு வன்­பு­ணர்­வுக்கு உள்­ளா­கி­யுள்ள யுவ­தியின் தாய் 12 வரு­டங்­க­ளாக வெளி­நாட்டில் பணி­பு­ரிந்து வரு­வ­தா­கவும் அவர் ஓரிரு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தனது வீட்­டுக்கு வந்து செல்­வ­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இந்­நி­லையில் தனது தந்­தை­யினால் தான் முதலில் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் பின்னர் வீட்­டுக்கு வந்த தந்­தையின் நண்­பர்கள் சிலரால் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த யுவதி பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.

இதே­வேளை குறித்தபெண் வன்­பு­ணர்­வினால் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கரு­த்த­ரித்­தி­ருந்­த­தா­கவும், மேற்­கு­றிப்­பிட்ட உற­வினர் பெண்­ணினால் கருக்­க­லைப்பு செய்­யப்­பட்­ட­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தனது தந்தை உட்­பட மற்­றைய நபர்­க­ளினால் தான் இவ்­வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறித்த யுவதி வீட்டிலிருந்து தப்பிச் சென்று நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் நாட்டையே தாக்கும் வல்லமை எங்களுக்கு உள்ளது: பாகிஸ்தான் விஞ்ஞானிக்கு இந்தியா பதிலடி..!!
Next post அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!