அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!

Read Time:2 Minute, 30 Second

download (1)அநு­ரா­த­புரம், கல்­னேவ வலஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள வர்த்­தகர் ஒரு­வ­ரது வீட்­ டினுள் நுழைந்த இனந்­தெ­ரி­யாத குழு­வி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் அந்த வர்த்­த­கரின் 11 வய­தான மகள் படு­கா­ய­ம­டைந்த நிலையில் அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

நேற்று முன்­தினம் அதி­காலை 1.30 மணி­ய­ளவில், இரா­ணுவ சீரு­டை­யை­யொத்த உடை­ய­ணிந்து வந்­தி­ருந்த நான்கு ஆயு­த­தா­ரிகள் குறித்த வர்த்­த­கரின் வீட்­டுக் குள் அனு­ம­தி­யின்றி நுழைந்­துள்­ளனர்.

அவர்­களை கண்டு அச்­ச­ம­டைந்த அந்த­வர்த்­தகர் அறை­யொன்­றினுள் சென்று தாளிட்­டுள்ள நிலையில் கத­வினை திறக்­கு­மாறு அக்­கு­ழு­வினர் அவ்­வ­றை­யினை நோக்கி துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­டதில் அறை­யினுள் உறக்­கத்­தி­லி­ருந்த 11 வய­தான சிறு­மியின் காலில் காய­மேற்­பட்­டுள்­ளது.

இத்­துப்­பாக்கி பிர­யோ­கத்­தினால் அச்­ச­ம­டைந்த வீட்டார் சத்­த­மிட்­டதன் விளை­வாக அய­ல­வர்கள் அனை­வரும் வர்த்­த­கரின் வீட்டை நோக்கி விரை­யவே சந்­தேக நபர்கள் தப்பிச் சென்­றுள்­ளனர்.

துப்­பாக்கிச் சூட்டில் காய­ம­டைந்த சிறுமி அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு சத்­திர சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நபர்கள் இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­டாத நிலையில் வட­மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையின் கீழ் மூன்று குழுக்கள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்..!!
Next post 13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு..!!