டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!!
சென்னை பட்டாளத்தை சேர்ந்தவர் பாபுசிங் (45) டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் புனேயை சேர்ந்த ராகேஷ் (28), டிக்கு (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கொண்டு வரப்பட்டு 2 பேரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலையாளிகள் 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்காக ஜார்ஜ் டவுன் 8-வது மாஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
அந்த மனு மாஜிஸ்திரேட்டு வடிவேலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலையாளிகள் ராகேஷ் மற்றும் டிக்கு ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Average Rating