டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!!

Read Time:1 Minute, 27 Second

201605301520493344_Travels-owner-murder-case-in-royapuram_SECVPFசென்னை பட்டாளத்தை சேர்ந்தவர் பாபுசிங் (45) டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் புனேயை சேர்ந்த ராகேஷ் (28), டிக்கு (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கொண்டு வரப்பட்டு 2 பேரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்காக ஜார்ஜ் டவுன் 8-வது மாஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.

அந்த மனு மாஜிஸ்திரேட்டு வடிவேலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலையாளிகள் ராகேஷ் மற்றும் டிக்கு ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலி அருகே படகுகள் கடலில் முழ்கி 700 அகதிகள் பலி..!!
Next post சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!