இளம்பெண் தற்கொலை: பெண்ணின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் புகார்..!!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகள் புஷ்பலட்சுமி.
இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பிரசன்னா வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 20.5.15 அன்று திருமணம் நடந்தது.
தற்போது பிரசன்ன வெங்கடேஷ் ஈரோடு வங்கிக்கு மாற்றப்பட்டு கணவனும், மனைவியும் ஈரோடு முனிசிபல் காலணி கிருஷ்ணசாமி தெருவில் வசித்து வந்தனர்.
திருமணம் செய்த சில நாட்களிலேயே கணவர் பிரசன்ன வெங்கடேஷ் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
மதுரையில் வசித்தபோது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக புஷ்பலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் வேலை மாறுதல் ஆகி ஈரோடு வந்த பிறகும் அவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 8.12.15 அன்று புஷ்பலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது கணவர் பிரசன்ன வெங்கடேஷ் மதுரையில் உள்ள மாமனாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஈரோட்டுக்கு வந்தனர். மகளின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் பிரபாகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கி கொண்டிருந்தார்.
அவரிடம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஷ்பலட்சுமியின் தந்தை நவநீதகிருஷ்ணனும் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், “என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவளது உடலில் தற்கொலை செய்ததற்கான எந்த தடயமும் இல்லை. அவளை கொலை செய்து விட்டனர். இதனை கண்டுபிடிக்க தாங்கள் உத்தரவிட வேண்டும். இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
Average Rating