காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்த நபரின் ஆணுறுப்பை கழிவறைத்தொட்டிக்கு ஊடாக வந்து கடித்த மலைப்பாம்பு..!!

Read Time:3 Minute, 47 Second

timthumbதாய்­லாந்தில் நபர் ஒருவர் காலைக்­க­டன்­களை கழிப்­ப­தற்­காக கழி­வ­றையில் அமர்ந்­தி­ருந்­த­போது கழி­வ­றைத்­தொட்­டியினூடாக வந்த மலைப்­பாம்­பொன்று அவரின் ஆணு­றுப்பை கடித்து காயப்­ப­டுத்­திய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

38 வய­தான அட்­டபோர்ன் பூன்­மெக்சோய் எனும் இந்­நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் தற்­போது சிகிச்சை பெற்­று­வ­ரு­கிறார். தாய்­லாந்து தலை­நகர் பேங்­கொக்கு கிழக்­கி­லுள்ள சசோயன் மாகா­ணத்தில் வசிக்கும் அட்­டபோர்ன் பூன்­மெக்சோய், கடந்த புதன்­கி­ழமை காலை வழக்கம் போல் கழி­வ­றைக்குச் சென்றார்.

“அப்­போது திடீ­ரென எனது ஆணு­றுப்பில் கடும் வலி ஏற்­பட்­டது. எனது ஆணு­றுப்பு வெட்­டப்­பட்­டுள்­ளதைப் போல் உணர்ந்­தேன்” என அட்­டபோர்ன் பூன்­மெக்சோய் தெரி­வித்­துள்ளார்.

தனது ஆணு­றுப்பை மலைப்­பாம்­பொன்று கவ்விக் கொண்­டி­ருப்­பதைப் பார்த்து பெரும் அதிர்ச்­சி­ய­டைந்துள்ளார். அப் ­பாம்பு இறுக்­க­மாக அவரின் உறுப்பை கௌவிக்­கொண்­டி­ருந்­தது. அதை­ய­டுத்து, அவர் உதவி கோரி தனது மனைவி அய­ல­வர்­களை சத்­த­மிட்டு அழைத்துள்ளார்.

அட்­டபோர்ன் பூன்­மெக்­சோயும் அவரின் மனை­வியும் அய­லவர் ஒரு­வரும் சுமார் 30 நிமி­டங்கள் பாம்­புடன் போரா­டினர்.

அட்­ட­போர்னின் மனைவி அப் பாம்பின் கழுத்தில் கயி­றொன்றைக் கட்டி இழுக்க, பாம்பின் வாயை விரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வெற்­றி­ய­டைந்த­போ­திலும் பின்னர் அவர் மயங்கி வீழ்ந்தார்.

அதன்பின் அட்­டபோர்ன் பூன்மெக் சோய் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். இதே­வேளை, அவ­சர சேவைப் பிரி­வினர் கழி­வறை குழாய்­களை அகற்றி மேற்­படி பாம்பை பிடித்­தனர். 10 அடி (3 மீற்றர்) நீள­மா­ன­தாக அப் ­பாம்பு காணப்­பட்­டது.

இச்­ சம்­ப­வத்தால், அட்­ட­போர்னின் மனைவி, மகள் ஆகியோர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள போதிலும், வைத்­திய­சா­லையில் சிகிச்சை பெறும் அட்­டபோர்ன் தைரி­ய­மா­ன­வ­ராக காணப்­ப­டு­வ­தா­கவும் தான் எதிர்­கொண்ட பயங்­கர அனு­பவம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளுக்கு உற்­சா­கத்­துடன் பேட்­டி­களை வழங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் சுலாரட் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் சுத்­திமா பின்­சரோன் தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட பிராந்­தி­யத்­தி­லுள்ள வன­ஜீ­வ­ரா­சிகள் பூங்காவொன் றின் மகளிர் கழி­வ­றையில் 12 அடி நீள­மான பாம்­பொன்றை சுத்­தி­க­ரிப்பு ஊழியர் ஒருவர் கண்டு மீட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழும்பூரில் 100 ரூபாய் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: நண்பர் கைது…!!
Next post சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!