சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்..!!
Read Time:1 Minute, 7 Second
இன்று காலை முதல், சென்னை அடையாரில் சூர்யா இரண்டு வாலிபர்களை தாக்கிய பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஒரு பெண்ணிடம் இரு இளைஞர்கள் வம்பு செய்ததாகவும், அதை பார்த்த சூர்யா அடித்ததாகவும் கூறப்பட்டது.
தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது, அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று புகார் தெரிவித்திருந்தார்,இந்நிலையில் தற்போது அந்த இளைஞன் சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம். இதனால் இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating