8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தூக்கி சென்ற பாதகன் ..!!(சி.சி.டி.வி காணொளி)

Read Time:4 Minute, 7 Second

rapist-abducting-sleeping-child-660x330டெல்லிக்கு அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் தேதி 8 வயது சிறுமி தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் சிறுமியை வாயை மூடி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளார்.

பின்னர், மோசமான நிலையில் சிறுமியை அதே இடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளார். மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளதால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமி ராவில்வாலிபர் சிறுமியின் வாயை மூடி தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
பாதிக்கப்படட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பொலிசார் சிசிடிவி வீடியோ காட்சி உதவியுடன் குற்றவாளியை கைதுசெய்துள்ளனர்.

இனியும், இதுபோன்ற கொடூரமான மிருகங்களிடமிருந்து அப்பாவி குழந்தைகளை பாதுகாக்க, இந்தியா அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

உலக முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நவீன அடிமைகளாக சிக்கி உள்ளனர்.இந்த எண்ணிக்கையில் 3ல் 2 பங்கு ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.இந்த விவரங்கள் 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை வால்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் மிக அதிகமாக 1.8 கோடி பேர் அடிமைகாளாக சிக்கி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது. இதில் அதிக அளவு குழந்தைகள் உள்ளனர்.

இந்தியாவில் சிறுமிகளை கடத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது.அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் சிறுமிகள் கடத்தப்படுவது குறையவில்லை.

இந்த நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி புதிய சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளார். அதில் சிறுமிகளை கடத்துபவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத் துள்ளார்.

புதிய சட்டத்தின்படி, சிறுமிகளை கடத்தி செல்பவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு ஹார் மோன் ஊசிபோட்டு அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்ட னை விதிக்க அந்த புதிய சட்டத்தில் வழிவகை செய் யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை..!!
Next post குளிர் சாதன பெட்டியில் இறந்து கிடந்த 40 புலிக்குட்டிகள்: புத்த கோயிலில் பரபரப்பு..!!