குளிர் சாதன பெட்டியில் இறந்து கிடந்த 40 புலிக்குட்டிகள்: புத்த கோயிலில் பரபரப்பு..!!

Read Time:1 Minute, 43 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70தாய்லாந்தில் உள்ள புத்த கோயிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக்கோயிலின் மூலம், வன உயிர்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. கான்சனாபுரி மாகாணத்தில் உள்ள இந்த இடத்தில் இருந்து 130 உயிருள்ள புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது இறந்து கிடந்த புலிக்குட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாதளமாக உருவெடுத்துள்ள இந்தப் புலிக்கோயில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டொலர் அளவு வருமானம் வருகிறது.

விலங்கின ஆர்வலர்கள் இந்த புலிக் கோயிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வன உயிர்கள் கடத்தப்படுவதாகவும் தவறாக நடத்தப்படுவதாகவும் எழுந்த புகார்களை அடுத்து அங்குள்ள புலிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் இந்தக் கோயிலின் புத்த துறவிகளுடன் போராடிக்கொண்டிருந்தனர். எனினும் புத்த மதத் துறவிகள் அங்கு எந்த விதத் தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தூக்கி சென்ற பாதகன் ..!!(சி.சி.டி.வி காணொளி)
Next post மலைப்பாம்பு விழுங்கிய ஆட்டுக் குட்டிகளை துணிச்சலுடன் மீட்ட இளைஞன்……!! (வீடியோ)