திடீரென தீப்பற்றிய வாகனம்: பொரளை – கனத்தை பகுதியில் சம்பவம்..!!
Read Time:1 Minute, 16 Second
பொரளை – பேஸ்லைன் வீதியின், கனத்தை சந்திக்கு அருகில், சற்று நேரத்துக்கு முன்னர் வாகனம் ஒன்று தீப்பற்றியுள்ளது.
இதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த வாகனம் இதனால் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பெலவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்தோடு, தீக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து இதுவரை தகவல் தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating