ஜனாதிபதி சென்ற ஹோட்டலில் தீ விபத்து..!!
Read Time:1 Minute, 15 Second
ஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை, மிரிச்சவெல பிரதேசத்திலுள்ள ஷெங்ரிலா என்னும் 5 நட்சத்திர ஹோட்டல் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு வான வேடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது ஹோட்டலின் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு பகுதியிலி; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது அங்கிருந்த ஜனாதிபதி குறித்த வான வேடிக்கையை மாத்திரம் கண்டு இரசித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தீ விபத்தினால் அங்கிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating