மாணவனுடன் உடலுறவு வைத்து கர்ப்பமான ஆசிரியை போலீசில் சரண் அடைந்தார்..!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஸ்டொவல் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிவந்தவர் அலெக்சாண்டிரியா வேரா (வயது 24). இவர் தனது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமானதாக தெரிகிறது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அவர் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இது குறித்து அலெக்சாண்டிரியாவின் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் பல மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். ஆனால், இருவரும் தங்களுக்குள் உள்ள உறவை மறைக்கவில்லை.
இது குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசில் வேரா சரண் அடைந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இது குறித்து பள்ளியில் விசாரித்தபோது, அலெக்சாண்டிரியா வேரா கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டு தெரியவந்ததையடுத்து, அவர் நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
Average Rating