மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்
எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து மாவிலாறு அணைக்கட்டை மீட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று காலை 7.30 மணிக்கு இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் து}ரத்தில் உள்ள அல்லை இராணுவ முகாமிலிருந்து தற்பொழுது தாக்குதல் நடைபெற்று வருவதாக சேருவில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணதிலக தெரிவித்தார்.
கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்பகுதியை நோக்கி மும்முரமாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன. தற்பொழுது இராணுவம் மாவிலாறு அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் து}ரத்தில் இருப்பதாக அறியமுடிகின்றது.
எல்.ரீ.ரீ.ஈ. யின் முகாம்கள் கல்லடி, வெருகலாறு, பூநகர் போன்ற பகுதிகளில் உள்ளன. இதில் பூநகர் முகாம் இராணுவத்தின் தாக்குதலால் முற்றாக சேதமாகியுள்ளது. இதனால், இவர்கள் மாவிலாறுக்கு அருகிலுள்ள முகாமுக்கு வந்துள்ளனர். இத்தாக்குதலில் சுமார். 1000 எல்.ரீ.ரீ.ஈ. யினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.