மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்

Read Time:1 Minute, 40 Second

VELIGALARU(Mavilaaru).1jpg.jpgஎல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து மாவிலாறு அணைக்கட்டை மீட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று காலை 7.30 மணிக்கு இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் து}ரத்தில் உள்ள அல்லை இராணுவ முகாமிலிருந்து தற்பொழுது தாக்குதல் நடைபெற்று வருவதாக சேருவில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணதிலக தெரிவித்தார்.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இப்பகுதியை நோக்கி மும்முரமாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன. தற்பொழுது இராணுவம் மாவிலாறு அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் து}ரத்தில் இருப்பதாக அறியமுடிகின்றது.

எல்.ரீ.ரீ.ஈ. யின் முகாம்கள் கல்லடி, வெருகலாறு, பூநகர் போன்ற பகுதிகளில் உள்ளன. இதில் பூநகர் முகாம் இராணுவத்தின் தாக்குதலால் முற்றாக சேதமாகியுள்ளது. இதனால், இவர்கள் மாவிலாறுக்கு அருகிலுள்ள முகாமுக்கு வந்துள்ளனர். இத்தாக்குதலில் சுமார். 1000 எல்.ரீ.ரீ.ஈ. யினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
VELIGALARU(Mavilaaru).1jpg.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மீண்டும் போர் தொடங்கி விட்டதுபுலிகள் அறிவிப்பு
Next post முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது