மதம்மாறிய மகளை கொலை செய்து வீட்டு வளவுக்குள் புதைத்த தாய்; அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சம்பவம்…!!
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.
மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறுஅடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது செல்வநாயகம் ஜனனி, திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்துவந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.
சம்பவ தினமான 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டுவருவதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் மதம் மாறியது தொடர்பாக ஜனனிக்கும் 55 வயதான அவரின் தாயாருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என நேற்றையதினம் புரளியைகிளப்பிவிட்டுள்ள
நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிஸார் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது
குறித்த தாயாரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
Average Rating