செங்குத்தான 800 மீற்றர் உயரமான மலையைக் கடந்து பாடசாலைக்குச் செல்லும் சிறார்கள்..!!
சீனாவிலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த மாணவர்கள் 800 மீற்றர் உயரமான செங்குத்தான மலையைக் கடந்து பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.
சிச்சுவான் மாகாணத்தின், அட்டுலீர் எனும் இக் கிராமத்தைச் சேர்ந்த 6 முதல் 15 வயதான 15 சிறார்களே கல்விக்காக இவ்வாறான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அட்டுலீர் கிராமத்தில் விவசாயிகளான 72 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்
குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் பாடசாலைக்குச் செல்வத்றகு 800 மீற்றர் (2625 அடி) உயர பாறையை கடக்க வேண்டியுள்ளது.
இதற்காக இவர்கள் 17 மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்துகின்றனர். உலகில் பாடசாலைக்கும் வீட்டுக்கும் இடையிலான மிக ஆபத்தான பயணம் இது என வர்ணிக்கப்படுகிறது.
சென் ஜீ எனும் புகைப்படப்பிடிப்பாளர் மூலம் இவ் விடயம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மேற்படி சிறார்கள் பாடசாலைக்குச் சென்று வருவதற்கான பாதுகாப்பான தெரிவுகள் குறித்து ஆராய்வதற்காக உள்ளூர் அதிகாரிகள் அக்கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.
செலவு அதிகமான போதிலும் இக் கிராமத்துக்கான வீதியொன்றை நிர்மாணிப் பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Average Rating