கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலி..!!
Read Time:54 Second
பீகார் மாநிலம், புரினியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி நேற்று பின்னிரவு பிரசவ வேதனையால் துடித்தார். அவரது உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றனர்.
இன்று அதிகாலை மேவாலால் பகுதி வழியாக சென்றபோது எதிரே வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருக்கு துணையாக சென்ற மேலும் ஐந்துபேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
Average Rating