ஆந்திராவில் பாம்பு கடித்து பெண் – பால்குடித்த குழந்தை பலி..!!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கண்ணா. இவரது மனைவி சந்திரகலா (வயது 30) மாடு மேய்த்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர்களுக்கு 1 வயதில் வம்சி என்ற குழந்தை இருந்தது.
நேற்று அதிகாலை 5 மணியளவில் சந்திரகலா மாட்டு தொழுவத்தில் பால் கறந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. ஆனால் இருட்டில் ஏதோ பூச்சி கடித்திருக்கும் என்று கருதிய சந்திரகலா அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் கால் வலித்துக் கொண்டே இருந்தது.
இதற்கிடையே சந்திரகலாவின் குழந்தை வம்சி பசியால் அழுதது. உடனே சந்திரகலா கால் வலியை பொறுத்துக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள். அதற்குள் பாம்பு கடித்த விஷயம் தாய்ப்பாலில் ஏறியிருந்தது. பாலை குடித்த குழந்தை வம்சியின் வாயில் இருந்து நுரைதள்ளியது.
இதைப் பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அவரது உடல்முழுவதும் விஷம் பரவி வாயில் இருந்தும் நுரை தள்ளியது.
இதையடுத்து தாய்-குழந்தை இருவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகலாவும், குழந்தை வம்சியும் பரிதாபமாக இருந்தனர்.
Average Rating