திருவண்ணாமலை அருகே கற்பழிப்பு முயற்சியில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை: வாலிபர் கைது..!!
திருவண்ணாமலை அருகே வானாபுரத்தை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால். இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு பாலாஜி, ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், 15 வயது நிரம்பிய அஸ்வினி என்ற மகளும் உள்ளனர்.
மகன்கள், மகளுடன் முருகாயி பெங்களூருவில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். ரேணுகோபாலுக்கு லேசாக கண் தெரியாது. அவர் மட்டும் மழுவம் பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வருகிற 9-ந் தேதி பாலாஜிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக முருகாயி பெங்களூருவில் இருந்து மகன்கள், மகள் அஸ்வினியுடன் மழுவம் பட்டுக்கு வந்தார்.
பந்தக்கால் நடுவதற்காக கம்பு எடுத்து வர ரேணுகோபால், முருகாயி, அஸ்வினி ஆகிய 3 பேரும் அங்குள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர். ரேணுகோபாலும் முருகாயியும் கம்பு வெட்டிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்து அஸ்வினியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அஸ்வினி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பண்டாரிநாதன் (36) என்பவர் அஸ்வினியை வழி மறித்து நிறுத்தினார்.
பின்னர் அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு கடத்தி சென்றார். அங்கு அஸ்வினியை கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து அஸ்வினி தப்பிக்க முயன்று சத்தம் போட்டார். எங்கே சத்தம் கேட்டு ஆட்கள் வந்து விடுவார்களோ என்று பண்டாரி நாதன் பயந்து அஸ்வினியின் கழுத்தை நெரித்தார்.
இதில் மாலினி பரிதாபமாக இறந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், முருகாயியும் அங்கு ஓடி வந்தனர். அங்கு அஸ்வினி பிணமாக கிடந்தார். பண்டாரிநாதன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து வானாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்டாரிநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating