மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளி..!!

Read Time:5 Minute, 36 Second

201606032308381561_mother-killed-by-the-wife-of-a-worker-hide-wrong_SECVPFஆற்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). இவருடைய கணவர் பெத்தையா. இவர்களுக்கு ராஜேந்திரன் (43), ரங்கன் (38), ரமேஷ் (35) என்று 3 மகன்கள் உள்ளனர். கருத்து- வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பூங்காவனத்தை பிரிந்த பெத்தையா ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் வசிக்கும் முதல் மனைவியுடன் சென்று சேர்ந்து கொண்டார்.

இதனால் பூங்காவனம் தனது மகன்களை கூலி வேலைக்கு சென்று வளர்த்தார். மகன்கள் 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்தார். அதன்பிறகு, மகன்கள் 3 பேரும் தனி குடித்தனம் சென்று விட்டனர். இதனால் தாய் பூங்காவனம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்தார். 100 நாள் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

அவருடைய இளைய மகன் ரமேஷ் நெசவு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு காவியா என்ற மகளும், தோணி மற்றும் காலீஷ் கோடி என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம், ரமேசுக்கு தெரியவந்தது. மனைவியை அவர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரியா, ஆரணி அருகே உள்ள களத்துமேட்டு தெருவில் வசிக்கும் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரமேஷ், தனது தாய் பூங்காவனத்திடம் சென்று குமுறினார்.

மகனை சமாதானம் செய்ய முயன்ற பூங்காவனம், கள்ளத் தொடர்பு விவகாரம் தனக்கு ஏற்கனவே தெரியும். உன்னிடம் சொன்னால் குடும்பத்திற்குள் சண்டை வரும் என்பதால் சொல்ல வில்லை எனக் கூறியுள்ளார்.

மனைவியின் கள்ளத் தொடர்பு தாய்க்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த ரமேஷ் தாய் மீது கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு, ஸ்ரீகாளஹஸ்தியில் வசிக்கும் தந்தையின் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து நேற்று ஊர் திரும்பினார்.

மனைவி மற்றும் தாய் மீது ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக, நேற்றிரவு அதிகளவு மது அருந்தினார். குடிபோதையில் நள்ளிரவு வீட்டுக்கு வந்த ரமேஷ், தூங்கிக் கொண்டிருந்த தாய் பூங்காவனத்தை அரிவாளால் வெட்டினார். இதில் வெட்டுக்காயம் அடைந்த பூங்காவனம் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார்.

தாயை துரத்தி பிடித்த ரமேஷ் குண்டு கட்டாக வீட்டுக்குள் தூக்கிச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், ஆரணியில் மாமியார் வீட்டில் உள்ள மனைவியை கொலை செய்வதற்காக ரத்தக்கறை படிந்த துணியை மாற்றிவிட்டு புறப்பட்டு சென்றார். இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் திமிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்ய சென்ற ரமேசை பிடிக்க ஜீப் மூலம் ஆரணிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தாயை கொலை செய்ததை காட்டிக் கொள்ளாமல், மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், திமிரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை?
Next post இதயம் துடிப்பதை உணர்ந்திருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? அதிசய சகோதரிகளின் ரியல் வாழ்க்கை..!!