தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–1 மாணவியை கற்பழித்த விவசாயி கைது…!!

Read Time:3 Minute, 48 Second

201606041628224641_plus-one-girl-student-torture-arrested-farmer-in_SECVPFதேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–1 மாணவியை கற்பழித்த விவசாயி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் குந்துக்கோட்டை அடுத்த சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.(வயது 37). விவசாயி. இவருடைய மகள் தன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்–1 படித்து வருகிறார்.

அவருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரும் தங்கி, அந்த பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.

இருவரும் ஒரே விடுதியில் தங்கி, ஒரே பள்ளியில் படித்து வருவதால், மாணவிகள் இருவரும் நெருக்கமான தோழிகள் ஆனார்கள்.

இந்த நிலையில், முருகேசன் தனது மகள் தன்யாவை பார்ப்பதற்காக அடிக்கடி விடுதிக்கு பழங்கள், பிஸ்கெட் மற்றும் இதர உணவு பொருட்களை வாங்கி கொண்டு வந்து மகளுக்கு கொடுப்பார். அப்போது அவருடன் விடுதியில் தங்கியிருக்கும் அந்த 16 வயது மாணவிக்கு பழங்கள் மற்றும் பிஸ்கெட்டுகள் என உணவு பொருட்களை முருகேசன் கொடுத்து வந்தார்.

விடுமுறை நாட்களில் அந்த மாணவி தனது தோழி தன்யாவை பார்ப்பதற்காக சொப்புக்குட்டை பகுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் தன்யாவின் தந்தை முருகேசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை மயக்கி ஆசை வார்த்தை கூறி கற்பழித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலை அடிக்கடி தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் பிளஸ்–1 தேர்வு எழுத சென்ற அந்த மாணவியை திடீரென முருகேசன் கடத்தி சென்று விட்டார். பின்னர், 2 மாதங்கள் கழித்து மாணவியை அவர் ஊருக்கு அழைத்து வந்தார்.

இதில் கர்ப்பமான மாணவி, முருகேசனால் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து கண்ணீர் மல்க தேன்கனிக் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.சவுந்தர் ராஜனை சந்தித்தும் புகார் மனு அளித்தார். இதையடுத்து டி.எஸ்.பி.சவுந்தர் ராஜன், மாணவியை கற்பழித்த முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவபரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பிளஸ்–1 மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “நோர்மல் என்றால் 5000 வரும், அதிஉச்சம் என்றால் 8000 ஆகும்” – “தாய்­மசாஜ்” என்ற பெயரில் விபசாரம்.. -எம்.எப்.எம்.பஸீர்
Next post 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!