12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

Read Time:2 Minute, 12 Second

201606041443571734_coimbatore-woman-court-judgement-for-12-year-old-daughter_SECVPF12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு குர்ரத் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 34), பழைய இரும்பை பிரித்தெடுக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவுலத் நிஷா (30). இவர்களுக்கு சபானா (12), செலியனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 9-11-2013 அன்று வீட்டில் சபானாவை மகள் என்றும் பாராமல் ஹக்கீம் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டுக்கு வந்த தவுலத் நிஷா இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கண்டித்து கூச்சல் போட்டார்.

இதன்பின்னர் சபானாவிடம் தவுலத் நிஷா விசாரித்த போது, தந்தை ஹக்கீம் ஏற்கனவே 5-11-2013 அன்று கற்பழித்ததாக தெரிவித்தார்.

இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஹக்கீம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே ஹக்கீம் வெறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜன், மகளை கற்பழித்த ஹக்கீமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–1 மாணவியை கற்பழித்த விவசாயி கைது…!!
Next post திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி பலி..!!