திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி பலி..!!

Read Time:1 Minute, 56 Second

201606041700148086_car-and-lorry-accident-husband-wife-dead-near-dindigul_SECVPFதிண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்தவர் ஜமுனா (வயது 45). அதே பகுதியில் மகளிர் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது உறவினரான நெல்லையைச் சேர்ந்த சவுண்டையன் (57). வைஜெயந்தி (52) ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களுடன் ஒரு காரில் இரவு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜமுனா வந்தார். காரை மணி (22) என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சர்வீஸ் ரோட்டில் வராமல் 4 வழிச்சாலையில் வந்ததால் காரை திருப்புவதற்காக டிரைவர் மணி பிரேக் போட்டார். அப்போது பின்னால் கரூரில் இருந்து வாடிப்பட்டிக்கு மணல் ஏற்றி வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த அனைவரும் அலறினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் வரும் வழியிலேயே சவுண்டையனும் அவரது மனைவி வைஜெயந்தியும் உயிரிழந்தனர்.

ஜமுனா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்பாத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த வேடசந்தூரைச் சேர்ந்த மருதாசலம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!
Next post மனைவி–மகன் எரித்துக்கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு…!!