மனைவி–மகன் எரித்துக்கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு…!!

Read Time:3 Minute, 34 Second

201606041351071302_Son-worker-sentenced-to-life-for-killing-wife_SECVPFதஞ்சை கீழவாசல் குறிச்சி புதுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஆசைமணி(வயது38). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி கல்யாணி(31). இவர்களுடைய மகன் ராஜசூர்யா(7). இவன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். பணப் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் ஆசைமணி தனது மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இரவு கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஆசைமணி வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து, கல்யாணி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் துடித்த கல்யாணி வீட்டிற்குள் இருந்து வெளியே தப்பி செல்வதற்கு முயன்றார். அப்போது ஆசைமணி வீட்டில் இருந்த சைக்கிளை தூக்கி கல்யாணி மீது வீசினார். இதில் நிலைதடுமாறிய அவர், தூங்கி கொண்டிருந்த மகன் ராஜசூர்யா மீது விழுந்தார்.

இதில் ராஜசூர்யா மீதும் தீப்பிடித்து எரிந்தது. இருவருடைய அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவர்களுடன் சேர்ந்து ஆசைமணியும் தீயை அணைக்க முயன்றபோது அவரும் காயம் அடைந்தார். இதில் காயம் அடைந்த கல்யாணி, ராஜசூர்யா, ஆசைமணி ஆகிய 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் காலையில் கல்யாணி, ராஜசூர்யா ஆகியோர் இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆசைமணியை கைது செய்தனர். பின்னர் ஆசைமணியை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரணை செய்து இந்திய தண்டனை சட்டம் 302–ன் கீழ் ஆசைமணி குற்றவாளி என்று தீர்மானித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், கல்யாணி கொலைக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ராஜசூர்யா கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனையும், அபராதமாக தலா ரூ.1000-மும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனைகளை ஒருங்கிணைத்து ஏக காலத்தில் ஆசைமணி அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அரசு தரப்பில் வக்கீல் கண்ணகி கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ஆசைமணி திருச்சி மத்தியஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி பலி..!!
Next post கணவன், மகனின் கழுத்தை அறுத்துக் கொன்று பெண் தற்கொலை..!!