கணவன், மகனின் கழுத்தை அறுத்துக் கொன்று பெண் தற்கொலை..!!
மராட்டிய மாநிலத்தில் கணவன் மற்றும் மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற 25 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், நாக்பூர் மாவட்டம், டிம்க்கி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சர்வார் ஆலம்(35). இவருக்கும் இவரது மனைவியான நிஷா(25) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இந்நிலையில், இவர்கள் வீட்டில் இருந்து நேற்றுமாலை சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சர்வார் ஆலம் வீட்டை திறந்து பார்த்தனர்.
வீட்டினுள் சர்வார் ஆலம் மற்றும் அவரது மகனான டாடு(5) ஆகியோர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணங்களாக கிடந்தனர். அருகாமையில் தற்கொலை செய்துகொண்ட நிஷாவும் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நாக்பூர் மாவட்ட போலீசார், இந்த கோரமுடிவின் பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Average Rating