அரியவகை நோயால் அவதிப்படும் சிறுவர்கள்..!!
நியூசிலாந்தில் குழந்தைகள் இருவர் இரண்டு மணிநேரங்களுக்கு ஒருமுறை உணவை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் கோமா நிலைக்கு செல்லக்கூடிய அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நியூசிலாந்தின் Christchurch நகரத்தை சேர்ந்த தம்பதி Kayleigh மற்றும் Ben.
இவர்களுக்கு Leo என்ற இரண்டு வயது மகனும், Elliott என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.
இருவரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதாவது அவர்களால் ஆற்றல் அளிக்ககூடிய க்ளைகோஜென் புரதத்தை சேமித்து வைக்க முடியாது.
இதனால் இருவரும் இரண்டு மணிநேரங்களுக்கு ஒருதடவை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையெனில் கோமா நிலைக்கு செல்ல நேரிடும்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், சாப்பிட்டாலும் அவர்களது வயிறு காலியாகவே இருக்கும், ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என ஒவ்வொரு நிமிடமும் அவர்களின் உடல்நலன் பற்றி கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
Average Rating