திருவனந்தபுரம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய கண்ணாடி மீன்…!!
Read Time:1 Minute, 13 Second
திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடலில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய போது, அவர்களின் வலையில் வித்தியாசமான மீன்கள் சிக்கி இருந்தன.
கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அந்த மீன் சூரிய ஒளியில் தகதகவென பிரதிபலித்தது. பல மீனவர்களின் வலையில் இத்தகைய மீன்கள் ஏராளமாக சிக்கி இருந்தன.
இதுபற்றி மீனவர்கள் கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்ணாடி மீன்களை கைப்பற்றி ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி கோவளம் பகுதி மீனவர்கள் கூறும்போது, இதுபோன்ற கண்ணாடி மீன்களை நாங்கள் இதுவரை பிடித்ததில்லை. இப்போது தான் வலையில் சிக்கி உள்ளது. இது எந்த வகை மீன் என்பதை மீன்வளத்துறையினர்தான் கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்றனர்.
Average Rating