ஆம்புலன்சில் திருமணம்!… விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்த காதலன்…!!

Read Time:2 Minute, 20 Second

ambulance_marriage_002.w540இந்தியாவில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலக்முரு தாலுக்காவில் உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. நர்சிங் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜூன் 5ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

தனியார் அறக்கட்டளை அமைப்பு சார்பில் 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரமாண்ட திருமணத்தில் தான் இந்த ஜோடி மணந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி நேத்ராவதி விபத்தில் காயம் அடைந்தார். அவரது தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் மேல் சிகிச்சை பெற்ற பிறகு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திட்டமிட்ட தேதியில் காதலரை மணந்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இது குறித்து அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

படுக்கையை விட்டு நிற்கவோ அல்லது எழுந்திரிக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டு திருமணத்திற்கு அனுமதி அளித்தார். அதன்படி அவர் ஸ்டெச்சர் மூலம் ஆம்புலன்சில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்சில் வைத்து அவர் தனது காதலர் குருசாமியை திருமணம் செய்துக் கொண்டார். நேத்ராவதியின் கழுத்தில் அவரது காதலன் தாலி கட்டினார். ஆம்புலன்சில் நடந்த இந்த திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யு.எஸ்.: விடாமல் அழுத பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய்…!!
Next post கோயில் பூசாரி படுகொலை எதிரொலி: வங்காளதேசத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!