குரைப்பதை தடுக்க நாய் வாயை கட்டிய பெண்ணுக்கு ஜெயில்…!!
Read Time:1 Minute, 0 Second
அமெரிக்காவை சேர்ந்த பெண் காத்ரின் லெமன்ஸ் (45). இவர் தனது வீட்டில் ‘பிரவுன்’ என்ற நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த நாய் அடிக்கடி குரைத்தது. அது காத்ரினுக்கு தொந்தரவாக இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாயின் வாயை ‘டேப்’ வைத்து சுற்றி கட்டி வைத்தார். அக்காட்சி ‘பேஸ் புக்’ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைப்பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் போலீசில் புகார் செய்தனர். எனவே அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 60 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Average Rating