போர்ச்சுக்கல்லில் மூளைசாவு அடைந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த அதிசயம்…!!
போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் 6 மாதமாக இருந்த போது அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
அப் பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அக்குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
எனவே அக்குழந்தையை தொடர்ந்து வளர அப்பெண்ணின் கணவர் சம்மதித்தார். அதையடுத்து குழந்தை நலமுடன் வளர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
32 வாரங்களுக்கு பிறகு அப்பெண்ணுக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 2.35 கிலோ எடையுடன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த நீண்ட நாட்களுக்கு பிறகும் பெண்ணின் வயிற்றில் குழந்தை வளர்ந்து பிறந்தது போர்ச்சுக்கல்லில் இதுவே முதன்முறையாகும். போலந்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு 55 நாட்கள் கழித்து குழந்தை பிறந்தது. அக்குழந்தை 1 கிலோ எடை இருந்தது.
Average Rating