65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!!

Read Time:2 Minute, 24 Second

201606081448248437_Young-man-arrested-for-65-years-old-woman-molested-attempt_SECVPFஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனிமையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஸ்ரீகாளஹஸ்தி தெலுங்கு கங்கை காலனியை சேர்ந்த யஷ்வந்த் (வயது 23) என்பவர், மூதாட்டியை பார்த்து விட்டு பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்துள்ளார்.

பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த அவர், மூதாட்டியை வலுக்கட்டாயமாக பள்ளியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த மூதாட்டி சத்தம்போட்டு அலறவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் யஷ்வந்த் தப்பியோடி விட்டார்.

இதுபற்றி மூதாட்டி ஸ்ரீகாளஹஸ்தி 2–டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய யஷ்வந்த்தை தேடி வந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடகிஷோர் உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நாயக், ஏட்டுகள் சரத், கிருஷ்ணய்யா, கண்ணய்யா ஆகியோர் நேற்று யஷ்வந்த்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கு முன்னதாக தனியாக நடந்து சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும், சிறுமியை கொலை செய்ய முயன்றது. வீடுகளில் புகுந்து திருடிய சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதோடு பல வழக்குகளில் கைதாகி சிறை சென்றதாகவும் கூறினார். இதையடுத்து யஷ்வந்த்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்தில் ஓட்டை விழுந்து பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உதவிபெற்ற ஆறுவயது சிறுமி..!!
Next post கோவா: வீட்டில் தூங்கிய இளம்பெண், பாட்டி மீது ஆசிட் வீச்சு…!!