பாகிஸ்தானில் காதலனுடன் ஓடிய மகளை எரித்து கொன்ற தாய்…!!

Read Time:1 Minute, 28 Second

1053188245pak2பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் பர்வீர் பீபி. இவரது மகள் ஜீனத் ரபீக். (வயது 18).

இந்த பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதம் இல்லாத நிலையில் ஜீனத் ரபீக் தனது காதலனுடன் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டார்.

இது பர்வீர் பீபிக்கு பிடிக்கவில்லை. அவர் தனது மகன் அகமர் ரபீக்குடன் சேர்ந்து ஜீனத் ரபீக்கை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக பர்வீர் பீபி தனது மகளை நைசாக பேசி வரவழைத்தார். உனக்கு நாங்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி அளித்தார். இதை நம்பி வந்த மகளை கட்டி வைத்து தாய் – மகன் இருவரும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில், அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது தொடர்பாக பர்வீர் பீபியை போலீசார் கைது செய்தனர். அகமர் ரபீக் தப்பி ஓடி விட்டார்.

பாகிஸ்தானில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈழத்துக் கலைஞர்கள் குரலில் தெறி படத்தின் “உன்னாலே எந்நாளும்” பாடல்…!!
Next post நினைவிழந்த பெண்ணை அசால்ட்டாக கடத்திய மர்ம நபர்: வேடிக்கை பார்த்த மக்கள்…!!