இத்தாலி நாட்டில் சிறைகள் நிரம்பிவழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு
Read Time:1 Minute, 9 Second
இத்தாலியில் உள்ள சிறைகள் நிரம்பி வழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க அந்த நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. இத்தாலியில் உள்ள சிறைகளில் 42 ஆயிரம் பேர் மட்டுமே அடைத்து வைக்கமுடியும். ஆனால் 62 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க இத்தாலி அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கு பாராளுமன்றம் அனுமதி கிடைக்காவிட்டால் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நீதித்துறைமந்திரி மிரட்டினார். பாராளுமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
மாபியாகும்பல், தீவிரவாதிகள், கற்பழிப்புக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், விபசாரிகள் ஆகியோருக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது.