ஈராக்கில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி- 70 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 9 Second

201606091455365525_Over-20-killed-70-injured-as-car-bomb-blasts-rock-eastern_SECVPFஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாக்தாத்தின் கிழக்கு மாவட்டமான அல்-ஜிடிடா மாவட்டத்தில் முதல் தாக்குதல் நடைபெற்றது. மக்கள் அதிகமாக கூடும் வணிகத் தெருவில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்று போலீசார் கூறினர்.

மற்றொரு தாக்குதல் பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் நடைபெற்றது. இதில் 12 பேர் பலியானார்கள். கடந்த மாதம் 17-ந்தேதி பாக்தாத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேசிலில் பஸ் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் மாணவர்கள் உள்பட 15 பேர் பலி…!!
Next post வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கடலூர் வாலிபர் கொலை: வீடியோ ஆதாரம் இருப்பதாக அண்ணன் பரபரப்பு புகார்…!!