மனைவி நடத்தையில் சந்தேகம்: கிணற்றில் வீசி 2 வயது மகனை கொன்ற கொடூர தந்தை கைது…!!

Read Time:3 Minute, 55 Second

201606101345259761_2-years-boy-killed-by-father-near-santhavasal_SECVPFதிருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள் துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோமதிக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஷாலினி (6) என்ற மகளும், சுதீஷ் (2) என்ற மகனும் பிறந்தனர். கோமதியின் சொந்த ஊரான கிருஷ்ணாபுரத்தில் மனைவி, குழந்தைகளுடன் தேவராஜ் வசித்து வந்தார்.

கோமதியின் நடத்தையில் தேவராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் 2-வது குழந்தை சுதீஷ் தனக்கு பிறக்கவில்லை என்று கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் தேவராஜிக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்தில் இருந்த சுதீசை தூக்கிக்கொண்டு தேவராஜ் சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை கோமதிக்கு தேவராஜ் போன் செய்தார். துரிஞ்சிகுப்பம் அருகே உள்ள நடராஜன் என்பவரது விவசாய கிணற்றில் சுதீஷ் இறந்து கிடக்கிறான் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

கோமதியும் உறவினர்களும் பதறிடித்துக் கொண்டு அந்த கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு கிணற்றில் சுதீஷ் பிணமாக கிடந்ததை பார்த்து கோமதி கதறி துடித்தார். கிணற்றில் அருகே இருந்த தேவராஜ் கடும் போதையில் இருந்தார்.

அவரிடம் குழந்தை இறந்தது குறித்து கேட்டபோது அவரால் பேச முடியவில்லை. எனவே இது பற்றி சந்தவாசல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளிசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

சுதீசின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவராஜை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

கிணற்றின் அருகே நின்ற சுதீஷ் தவறி விழுந்து இறந்ததாக முதலில் தேவராஜ் கூறினார். பின்னர் போலீசார் துருவி துருவி விசாரித்த போது அவர் சதீசை கிணற்றில் வீசி கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் தேவராஜ் அளித்த வாக்குமூலத்தில், ‘‘மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகம் சுதீஷ் எனக்கு பிறக்கவில்லை என்ற நினைப்பை ஏற்படுத்தியது. எனவே அவன் மீது எனக்கு வெறுப்பு இருந்தது. அதுவே என்னை கொலைகாரனாக்கிவிட்டது’’ என்று கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் பட்டப்பகலில் 130 பவுன் நகை-பணம் கொள்ளை…!!
Next post உறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்…!!