பெண் குழந்தையை யாரிடமாவது வளர்க்க கொடுக்க முயற்சித்த பரிதாபமான இளம் தாய்..!!
இராணுவ காலால் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் மனைவி ஒருவர் பிறந்து இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு, செல்ல முயற்சித்துள்ளார்.
இந்த பெண் குழந்தையை கேகாலை வைத்தியசாலையில் வைத்து எவரிடமோ கொடுத்து விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார், பெண்ணின் தந்தையை வரவழைத்து பெண்ணையும் குழந்தையையும் ஒப்படைத்துள்ளனர்.
கேகாலை அட்டாளை பிரதேசத்தில் பிறந்து மின்னேரிய பிரதேசத்தில் வசித்து வரும் மின்னேரிய இராணுவ முகாமில் பணிப்புரியும் அதிகாரியின் மனைவியான 30 வயதான பெண்ணே குழந்தையை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
17 வயதில் திருமணம் செய்த இந்த பெண்ணுக்கு 12, 06 மற்றும் 4 வயதுகளில் மூன்று பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் திருமணம் செய்த கணவரை பிரிந்து, இரண்டாவதாக இராணுவ அதிகாரியை திருமணம் செய்துள்ளதுடன் அவருக்கு தற்போது பிறந்து இரண்டு மாதங்களான பெண் குழந்தை இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் கணவர், குதிரை பந்தயம் சூதாட்டத்திற்கும் போதைக்கும் அடிமையாகி இருப்பதால், குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் கொடுப்பதில்லை.
இதனால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்து இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இருவருக்கும் இடையில் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தை தூக்கிக் கொண்டு அன்றைய தினம் இரவு 11.30 அளவில் பெற்றோர் இருக்கும் கேகாலை அட்டாளை பிரதேசத்திற்கு செல்ல கேகாலை நகருக்கு வந்துள்ளார்.
வீட்டுக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால், குழந்தையுடன் கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்றுள்ளார்.
பெண் மீது சந்தேகம் கொண்ட வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு பொலிஸார் சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குழந்தையை எவரிடமாவது கொடுத்து விட்டுச் செல்லும் தேவை தனக்கிருப்பதாக பெண் கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று மதியம் வரை கேகாலை வைத்தியசாலையில் தங்கியிருக்க பொலிஸார் பெண்ணுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
குழந்தை பெற்றுக்கொள்ள குழந்தைகள் இல்லாத குடும்பம் ஒன்றின் நபர்கள் சிலர் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலை பொலிஸார், அட்டளையில் உள்ள பெண்ணின் தந்தையை வரவழைத்து விடயங்களை தெளிவுப்படுத்தி, குழந்தையையும் பெண்ணையும் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating