மெக்சிகோவில் அடுக்கடுக்காக கிடைக்கும் மர்மப் பிணங்கள்: போலீசார் அதிர்ச்சி…!!
ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.
இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக மர்மப் பிணங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.
தெற்கு மெக்சிகோவில் உள்ள மலைப்பிராந்தியமான சிலாப்பா என்ற பகுதி முழுமுழுக்க ஆயுதமேந்திய கடத்தல் கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மட்டும் 16 பேர் திடீரென்று மாயமாகிப் போனார்கள்.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த மூன்று பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை எட்டு பிணங்களை கைப்பற்றியுள்ள போலீசார் இந்த மர்மப் பிணங்களின் பின்னணி பற்றி விசாரித்துவரும் நிலையில் அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று பிளாஸ்டிக் கவர்களில் அழுகிய நிலையில் மிதந்த ஒரு பெண்ணுடைய உடலுறுப்புகளை நேற்று கண்டெடுத்துள்ளனர்.
Average Rating