கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை சடலமாக மீட்பு..!!
தாய் மற்றும் பாட்டியுடன் நெல் வயலுக்குச் சென்ற மூன்று வயது சிறுவன், கல்கமுவ-மிகல்வெவா பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகல்வெவா பிரதேசத்தை சேர்ந்த சதிஸா இசுறு விஹான்ஸ என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தாய் மற்றும் பாட்டி குழந்தையை அவனது சித்தியின் பாதுகாப்பில் முச்சக்கரவண்டியில் நிறுத்தி விட்டு வயல் வேலைகள் முடிந்தவுடன் தன் குழந்தை அழைத்துச் செல்வார்கள் என குழந்தையின் சித்தி தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சித்தி கண்ணயர்ந்த நேரத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைகளை முடித்து விட்டு வந்ந குழந்தையின் பாட்டி மற்றும் தாய் குழந்தையை காணவில்லை என சத்தமிட்டுள்ளனர்.
சத்தத்தை கேட்ட விவசாயி விரைந்து வந்து குழந்தையை கிணற்றில் கண்டு கிணற்றில் காப்பாற்ற குதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மிகல்வெவா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating