தாயும் மகனும் சடலமாக மீட்பு..!!
Read Time:1 Minute, 12 Second
காலி – எகொடவல, கரந்தெனிய பகுதியில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எகொடவல கால்வாயில் இருந்து மகன் மீட்கப்பட்டதாகவும், 60 வயதுடைய தாயின் சடலம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், உயிரிழந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சடலங்கள் பிரேதபரிசோதனைகளுக்காக கரந்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கரந்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating