உணவில் விஷம்! வயோதிப தம்பதியினர் வைத்தியசாலையில்..!!
Read Time:1 Minute, 16 Second
கேகாலை உந்துகொடை பிரதேசத்தை சேர்ந்த வயோதிப தம்பதியினர் உட்கொண்ட உணவு விஷமாகியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கேகாலை, உந்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய கணவன் மற்றும் 78 வயதுடைய அவரது மனைவி ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், வீட்டில் தயாரித்த உணவை உட்கொண்ட பின்னரே சுகவீனமுற்றதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, இவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் சிலவும் இவ் உணவை உட்கொண்ட பின்னர் உயிரிழந்துள்ளன.
மேலும் இந்த வயோதிப தம்பதியினரின் உணவில் நஞ்சு கலக்கப்பட்டதா? என்ற சோதனையை வைத்திய அதிகாரிகள் மேற்கொள்வதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating