ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை தராத மனைவியை எரித்த கணவன்…!!
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆலந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப செலவுக்காக ரவியின் பெற்றோர் பணம் கேட்டனர்.
இதையடுத்து ரவி தனது மனைவி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை வாங்கி அடகு வைத்து பணம் கொடுத்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வருமாறு ரவி மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
இதற்கு அவரது பெற்றோர் தங்கம், சோலையம்மாள், அண்ணன் கருப்பசாமி, அண்ணி பவித்ரா, தம்பி ராஜேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
சம்பவத்தன்று சுகன்யா குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். வரதட்சணை வாங்கி வராததால் கோபத்தில் இருந்த ரவி மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த சுகன்யா சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதனால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கடமலைக் குண்டு போலீசார் விசாரணை நடத்தி ரவி, அவரது சகோதரர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating