டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம் செய்த 3 பேர்…!!
டெல்லியில் 23 வயது பெண் கடத்தப்பட்டு ஓடும் காரில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடுவதற்காக நிஜாமுத்தீன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் அந்த பெண்ணை தங்களுடன் காரில் வருமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
உடனே அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். 3 பேரும் ஓடும் காரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மணிநேரம் கழித்து அந்த பெண்ணை டெல்லி போலீஸ் தலைமையகம் அருகே உள்ள சன்லைட் காலனியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating