வயோதிபரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் – வேடிக்கை பார்த்த மக்கள்..!!

Read Time:1 Minute, 24 Second

timthumb (2)யாழ்ப்பாணம் – ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வயோதிபர் ஒருவர் ஊனமுற்றோருக்கான மூன்று சில்லு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக மோதியுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் படுகாயமுற்றதால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வீதியோரம் காயங்களுடன் இருந்த ஊனமுற்ற வயோதிபருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லடம் அருகே வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொலை..!!
Next post வலிகாமம்; ஆசிரியரின் பாலியல் தேவைக்கு, புதிய மாணவிகள்……..?