தீயில் கருகிய கணவன்… ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனைவி…!!

Read Time:3 Minute, 22 Second

fire_hand_001.w245மனைவி ஒரு அறையில் தொலைக்­காட்சி நாடகம் பார்த்­து ரசித்துக்­கொண்­டி­ருக்க மறு அறையில் கணவர் தீயில் கருகி பலி­யான சம்­ப­வ­மொன்று கொல்­கத்­தாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவின் மாணிக்தலா அரச குடியிருப்பிலுள்ள அடுக்குமாடி வீட்டுத்தொகுதியின் 2 ஆவது மாடியிலேயே இச்ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுபெற்ற அரச அதிகாரியான 63 வயதுடைய ரஞ்சித்குமார் பரத் மற்றும் அவரது மனைவி சுதாபா ஆகியயோர் வசித்து வந்தனர். இவர்களது ஒரே மகள் திருமணமாகி குர்கானில் வசித்து வருகிறார்.

ரஞ்சித்குமார் பரத் மற்றும் சுதாபா தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவதினமாக கடந்த சனிக்­கி­ழமை அதிகாலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

அதனை அவதானித்து அங்கு திரண்ட அயல்வீட்டார், பொலிஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புபடையினர் குறித்த தம்பதியை மீட்க முயன்றனர்.

அப்போது சுதாபா ஒரு அறையில் தொலைக்­காட்சி பார்த்தபடி இருந்துள்ளார். அவரது கணவர் இருந்த மற்றொரு அறையிலிருந்து புகை வெளி வந்துள்ளது.

இதன்­போது பூட்டிக்கிடந்த அந்த அறை கதவை உடைத்த போது கணவரான ரஞ்சித்குமார் பரத் உடல் கருகி உயி­ரி­ழந்­த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இத­­னை­ய­டுத்து அவரது உடலை மீட்ட தீயணைப்பு படையினர், பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றனர். பின்னர் மனைவி சுதாபாவிடம் பொலிஸார் விசா­ரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏன் கணவரின் அறை கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது என கேட்டதற்கு அவர் தன்னை கொல்ல வந்ததால் அறைக்குள் வைத்து பூட்டியதாக தெரிவித்துள்­ளார். எனவே மனைவியே கணவனை தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுதாபாவின் உடலில் மண்ணெண்ணெய் சிதறி இருந்ததால் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் பரத் தீயில் கருகி இறந்தமை தொடர்பாக மனைவி சுதாபா மற்றும் அவரது ஆண் நண்பரையும் பொலி­ஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரம்.. 21 வயது வாலிபரை உயிருடன் தோலை உரித்துக் கொன்ற தலிபான் கொடூரர்கள்…!!
Next post ஊளையிடும் ஓநாய் உருவத்தில் மறைந்திருக்கும் பெண்கள்…. கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்…!!