வௌ்ளவாய பகுதியில் 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 11 Second
வௌ்ளவாய, எத்திலிவெவ, தோரஆர வாவியில் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் தனது பாட்டி மற்றும் 5 வயதுடை தனது தங்கையுடன் வாவியில் குளிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியதுடன் சிறுவர்களின் பாட்டி சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றி வெள்ளவாய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் வௌ்ளவாய ,எத்திலிவெவ பிரதேசத்தை சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Average Rating