சேலத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் பணம் – நகைகள் கொள்ளை: நூதன முறையில் கைவரிசை காட்டியது அம்பலம்…!!

Read Time:4 Minute, 19 Second

201606141313014756_Government-bus-Conductor-house-money-jewelry-robbery-in_SECVPFசேலம் அம்மாப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் தனியார் மில் பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் நடேசன் (வயது 47). இவரது மனைவி பூங்கொடி(41).

இந்த நிலையில், நேற்றிரவு நடேசன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். மனைவி பூங்கொடி இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் கதவு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு பூங்கொடி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகைகள் ஆகியவை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்தும் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், பூங்கொடி வீட்டின் கதவு மற்றும் பீரோவை பூட்டி, அதன் சாவியை ஒரு கைப்பையில் வைத்து, பின்னர் அந்த கைப்பையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் படுக்கை அறையின் ஜன்னல் கதவை திறந்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு வேளையில் அந்த ஜன்னல் கதவின் வழியாக கைப்பையை எடுத்து, வீட்டின் கதவை திறந்து, உள்ளே புகுந்தனர்.

அதன் பிறகு பீரோவின் சாவியை எடுத்து பீரோவின் கதவை நைசாக திறந்து, அதில் வைத் திருந்த பணமும், நகையையும் திருடினார்கள். இதையடுத்து, மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை திறந்து அதன் வழியாக வெளியே வந்து, படுக்கை அறையின் ஜன்னல் வழியாக கைப்பையையும் சாவியையும் எடுத்தது போல், அதே மாதிரி கைப்பையையும் சாவியையும் தலையணைக்கு அடியில் வைத்து விட்டு ஓடி விட்டனர்.

திருட்டு போன இந்த நகையின் மதிப்பு சுமார் ரூ. 2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

வேலை விஷயமாக வெளியே சென்ற நடேசன் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். பூங்கொடி முதல் கணவரை பிரிந்து நடேசனை 2-வதாக திருமணம் செய்துள்ளளார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.

பூங்கொடிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த மகன் ரகுபதி தனது தாய் பூங்கொடியுடன் வசித்து வருகிறார். கொள்ளை நடைபெற்ற நேற்றிரவு ரகுபதி அதே வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். எனவே, போலீசாருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது கொள்ளை நாடகமாக இருக்கலாமா? அல்லது உண்மையிலேயே நூதன முறையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்ததால் கல்லூரி பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டினார்: உயிர் தப்பிய ஆசிரியை வாக்குமூலம்…!!
Next post வாணியம்பாடி அருகே பெண் குழந்தை முட்புதரில் வீச்சு: கொடூர தாய்க்கு வலை…!!