பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்…!!
Read Time:1 Minute, 18 Second
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசைப்பயிற்சி ஆசிரியரை மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர்(வயது-63). அங்கு பயிலும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல், கேலி செய்ததோடு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இசைப்பயிற்சி என்ற பெயரில் மாணவிகளிடம் அந்த ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating